Sunday, November 15, 2009

கார வகைகள்

பொட்டு கடலை தட்டை

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 4 கப்
வெண்ணெய் - 100 g

பொட்டு கடலை – 1 கப்
ஊறிய கடலை பருப்பு – 1/4 கப்

காரப் பொடி - 1ஸ்பூன்

ஊறிய நிலக்கடலை பருப்பு – ¼ கப்

சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 டீஸ்பூன்
எள் , சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையானது
எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை

  • அரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்
  • பொட்டு கடலை மிக்க்ஷியில் அரைத்து சலித்து வைத்துகொள்ளவும்
  • அரைத்த பொட்டு கடலை மாவு, ஊறிய் கடலை பருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிலை,உப்பு - தேவையானது ,பெருங்காயம்,வெண்ணெய் இவற்றை ஒன்றாக கலந்துக் கொள்ளவும்
  • சின்ன உருண்டைகலாக் உருட்டி தட்டிக் கொள்ளவும்
  • தட்டியவற்றை எண்ணையில் பொறித்து எடுக்கவும்

நோட்:

  • சோடா உப்பு , வெண்ணெய் இவற்றை பேஸ்ட் போல் செய்துகொண்டு பின் மாவினை கலந்தால் கரகரப்பாக இருக்கும்

உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்

No comments:

Post a Comment

Warning

Protected by Copyscape Plagiarism Check Software