Wednesday, November 18, 2009

தட்டை

பச்சரிசி மாவுத் தட்டை

தேவையான பொருட்கள்

பச்சரிசி- 4 கப்
வறுத்து அரைத்த் உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெண்ணெய் - 100gm
ஊறிய கடலைப் பருப்பு – 1/4 கப்
காரப் பொடி - 1 டீஸ்பூன்
எள் , சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
ஊறிய நிலக்கடலைப் பருப்பு – ¼ கப்

செய்முறை

  • அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து , வெய்யிலில் சிறிது நேரம் காயவைக்கவும்.
  • காய வைத்ததை அரைத்துக் கொள்ளவும்.
  • வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு பொடி , ஊறிய கடலைப் பருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிலை,உப்பு - தேவையான அளவு , ஊறிய நிலக்கடலைப் பருப்பு,பெருங்காயம் ,வெண்ணெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.
  • தட்டியவற்றை எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

நோட்:

  • உளுத்தம்பருப்பை வெறும்வாணலியில் வறுக்க வேண்டும்.
  • சோடா உப்பு , வெண்ணெய் இவற்றை பேஸ்ட் போல் செய்துகொண்டு, பின் மாவில் கலந்தால் கரகரப்பாக் இருக்கும்.

உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

Warning

Protected by Copyscape Plagiarism Check Software